வசூல் மழையில் ‘தாய் கிழவி’: கோலிவுட்டின் புதிய சரித்திரம்!
தமிழ் சினிமாவில் ஒரு மூத்த நடிகையை மையமாக வைத்து எடுக்கப்பட்டத் திரைப்படம் இவ்வளவு பெரிய வெற்றியைப் பெறுவது இதுவே முதல்முறை. ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான ‘தாய் கிழவி’ திரைப்படம், தற்போது தமிழ் திரையுலகின் டாக் ஆஃப் தி டவுனாக மாறியுள்ளது. தியேட்டர்கள் ஆள் நடமாட்டமில்லாமல் இருந்த ஒரு வறண்ட காலக்கட்டத்தில், ரசிகர்களை மீண்டும் தியேட்டருக்கு வரவழைத்த பெருமை இந்த படத்தையேச் சாரும்.
படம் வெளியான முதல் மூன்று நாட்களிலேயே உலகளவில் 22 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதனைத் தயாரிப்பு நிறுவனமான SK புரோடக்ஷன்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுமட்டுமல்லாமல், BookMyShow தளத்தில் மட்டும் 17 நாட்களில் 10 லட்சம் (1 Million) டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளது ஒரு மிகப்பெரிய மைல்கல்லாகும்.
“இந்த படம் ஓடாவிட்டாலும் உங்கள் நடிப்பு பேசப்படும், ஆனால் படம் ஜெயித்தால் அது ஒட்டுமொத்த படக்குழுவின் வெற்றியாக அமையும்” என்று உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் கூறிய வார்த்தைகள் இன்று உண்மையாகியுள்ளது என்று ராதிகா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில், நிவாஸ் கே பிரசன்னா இசையில் உருவான இந்த படம், குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு மிகப்பெரிய லாபத்தை ஈட்டியுள்ளது. இப்படத்திற்காக ராதிகா அவர்கள் சம்பளத்துடன் சேர்த்து லாபத்திலும் பங்கு (Profit Share) பெற்றுள்ளார். இது கோலிவுட்டில் ஒரு நடிகைக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய அங்கீகாரமாகக் கருதப்படுகிறது.
மொத்தத்தில், ‘தாய் கிழவி’ வெறும் படமல்ல, அது நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கு மக்கள் எப்போதும் ஆதரவு தருவார்கள் என்பதற்கான சான்று!